நேர்முக தேர்வில் பங்கேற்றதற்காக பணி நியமனம் வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படித்த ராஜேஷ் என்பவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு அவருக்கு அழைப்பு வந்தது.
நேர்முக தேர்வில் பங்கேற்ற அவருக்கு பணி நியமன உத்தரவு ஏதும் வராததால், பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தேர்வு நடவடிக்கையில் பங்கேற்றதற்காக பணி நியமனம் வழங்க வேண்டும் என உரிமை கோர முடியாது எனக் கூறி, ராஜேஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.