Advertisment

ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: மத்திய அரசு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: மத்திய அரசு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் 19-ம் தேதியுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே தங்களை முன் கூட்டி விடுவிக்கக்கோரி சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சிறை ஆலோசனைக் குழுவால் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசு தரப்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு 180 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அந்த பட்டியலில் ராபர்ட் பயஸ், ஜெயகுமார் பெயர்கள் இடம் பெற்றவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் ராபர்ட்பயாஸ், ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க தண்டனையில் இருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சி.பி.ஐ.-யால் விசாரிக்கப்பட்டது என்பதால், அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் உத்தரவு வரும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 16-ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment