Advertisment

ரேக்லா ரேஸ்க்கு தடை கோரி வழக்கு : பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தமிழகத்தில் ரேக்லா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rekla race

rekla race

தமிழகத்தில் ரேக்லா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வீடியோ ரமேஷ், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ’மத்திய அரசானது, கடந்த 2014 ஆம் ஆண்டில், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இதில், சல்லிக்கட்டு, ரேக்லா ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், இச்சட்டம் சரியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு, மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்து, அவசர சட்டம் இயற்ற அதற்கு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றியது. சட்டம் இயற்றியதால் தமிழகத்தில், சல்லிக்கட்டில் இருந்து வந்த தடை நீக்கப்பட்டது. இருப்பினும், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை.

அதேநேரத்தில், ரேக்லா ரேஸ் என்னும் மாட்டு வண்டி பந்தயத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சல்லிக்கட்டுக்கு இடம் பெற்ற விலக்கு அளித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு, வடமாடு, எருதுவிரட்டு ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாடுகளை கடுமையாக துன்புறுத்தப்படும் வகையில் ரேக்லா பந்தயங்கள் நடத்தப்படுவதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போன்று இந்த விளையாட்டு, கலாச்சாரத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விளையாட்டு கிடையாது. ரேக்லா ரேசில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது. இது, மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்பு திருத்த சட்டத்துக்கு எதிரானது. குறிப்பாக மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் ரேக்லா ரேஸ் விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு விளையாட்டுக்கான அனுமதி கொடுப்பது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். எனது கோரிக்கை குறித்து மாநில கால்நடை பராமரிப்பு துரை கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக, மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் பதில் தெரிவித்தார். ஆனால், ரேக்லா நடவடிக்கையை ரேஸுக்கு தடை விதிக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும்எ டுக்கவில்லை. எனவே, எந்த அமைப்புக்கும் ரேக்லா ரேஸ் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் ரேக்லா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவும் இல்லை; அரசும் சட்டமியற்றவும் இல்லாத நிலையில் ரேக்லா பந்தயம் நடத்தபடுவதால் தடை விதிக்க வேண்டும் என மனுதரார் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், எந்த அனுமதியிம் இல்லாத நிலையில் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு வழக்கு குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், குறுகிய கால அவகாசம் வழங்கும்படியும் கோரினார். பதில் அளிக்கும் வரை எந்த உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

இதனையேற்ற நீதிபதிகள், அரசின் நிலைப்பாட்டை டிசம்பர் 8ஆம் தேதிக்குள் ( வரும் வெள்ளிக்கிழமை) பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment