Advertisment

மதுரை விமான நிலையத்தில் முகநூலில் நேரலை செய்தவர் மீது தாக்குதல்; இ.பி.எஸ் மீது வழக்குப் பதிவு

எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணிக்கும்போது அவதூறு பேசி நேரலை செய்ததாக ராஜேஸ்வரன் என்பவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
eps

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணிக்கும்போது அவதூறு பேசி நேரலை செய்ததாக ராஜேஸ்வரன் என்பவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சிவகங்கையில் நடைபெற உள்ள அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி விமான நிலைய பேருந்தில் பயணித்த போது உடன் வந்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் இ.பி.எஸ் குறித்து அவதூறாக பேசி முகநூலில் நேரலை செய்தார்.

இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்தார். ராஜஸ்வரனை அங்கிருந்து அ.தி.மு.க-வினர் சிலர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இ.பி.எஸ்-ஐ அவதூறாக பேசிய சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது புகார் எதுவும் அளிக்கப்படாததால், போலீசார் அவரை விடுவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு (மார்ச் 11) திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் உதவி ஆணையர் சசிகுமாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்போனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையில் புகார் அளித்தார்.

ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன்,எம்.எல்.ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதே போல, அ.தி.மு.க தரப்பு அளித்த புகாரின் பேரில், நேரலை செய்த ராஜேஸ்வரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment