Advertisment

'விஸ்வரூபம் 2' படத்திற்கு தடை கோரி வழக்கு

'விஸ்வரூபம் 2' படத்திற்கு தடை கோரி வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு

நடிகர் கமல் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம் 2' படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisment

2008 ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் "உன்னைபோல் ஒருவன்" படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த 6.90 கோடி ரூபாய் கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை தயாரிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடியை கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தங்கள் நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி அளிக்கமால் விஸ்பரூபம் 2 படத்தை வெளியிட நடிகர் கமல், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment