Advertisment

உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு: வேதனையில் தமிழக விவசாயிகள்!

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு: வேதனையில் தமிழக விவசாயிகள்!

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தமிழக விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்டகாலமாக இருந்து வந்த காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று(16.2.18) தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இறுதி தீர்ப்பை வழங்கியது.இதில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை ஆண்டு தோறும் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,கர்நாடகாவுக்கு கூடுதலாக 14 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரவில்லை என்றாலும், தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியத்தையாவது உடனடியாக அமைத்து, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மன்னார்குடி ரங்கநாதன்(காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் )

”காவிரி நதி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஏற்கதக்கது. ஆனால், அதே சமயம் தமிழகத்தின் கோரிக்கயை ஏற்காமல், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

டெல்டா விவசாயிகள்  சங்கம்: 

92 டிஎம்சி-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாக குறைக்கப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கோதாவரி - காவிரி நதிகளை இணைத்தால், தேவைக்கு அதிகமாக நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,   தஞ்சாவூரில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அய்யக்கண்ணு (தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்)

“தண்ணீரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவையும் விட குறைவான தண்ணீர் வழங்குவதால் தமிழகத்தில் பாசனப் பகுதிகள் குறையும்.நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அதற்கான முயற்சியை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.இதுபோலவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அந்தந்த மாத அடிப்படையில் தண்ணீர் பகிர்வு நடைபெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment