காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
காவிரி விவகாரம் குறித்த இறுது தீர்ப்பில் , 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த கால அவகாசம் இன்றுடன் (29.03.18) முடிவடைகிறது. தற்போது வரை காவிரி மேலாண்மை அமைப்பதுக் குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று கெடு முடிவடைவதால், காவிரி மேலாண்மை அமைப்பத்குக் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவென்று ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று(29.3.18) அவசர ஆலோசனக் கூட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , தமிழக அரசு தொடர இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்பு, தினம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இன்று (29.3.19) முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைப்பெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.
கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று(28.3.18) பிரதமர் மோடி தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால். இறுதி வரை அந்த கூட்டம் நடைபெறாமல் காலம் தாழ்த்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.