Advertisment

கோவை டாக்டர் கொலை வழக்கு; வழக்கறிஞர் ராஜேந்திரனை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை மருத்துவர் கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி போலீஸில் சரண் அடைந்த வழக்கறிஞர் ராஜேந்திரனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

author-image
WebDesk
New Update
கோவை டாக்டர் கொலை வழக்கு; வழக்கறிஞர் ராஜேந்திரனை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை மருத்துவர் கொலைவழக்கில் கைதாகி உள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனை காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல மருத்துவமனை தாக்கப்பட்டு அதன் தலைமை மருத்துவர் விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் சரண் அடைந்ததார்.

இதையும் படியுங்கள்: கேரளா டிஜிட்டல் சர்வே முடித்த பிறகு பேச்சுவார்த்தையா? அமைச்சருக்கு கே.எஸ் ராதாகிருஷ்ணன் கேள்வி

இதனையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் ராஜேந்திரனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், வழக்கறிஞர் ராஜேந்திரனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று (நவம்பர் 8) முதல் 10 ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளார்.

publive-image

கோவை காந்திபுரம் சத்தி சாலையில் அமைந்துள்ள எல்லன் மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் ராமச்சந்திரன்,  சென்னையை சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மருத்துவமனையை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்திருந்தார்.

இதையடுத்து டாக்டர் உமா சங்கர் அந்த மருத்துவமனையை புனரமைத்து சென்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இருவரிடையே வாடகை தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட நிலையில், டாக்டர் ராமசந்திரன் அடியாட்களுடன் வந்து மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை விரட்டி விட்டு மருத்துவமனையை கைப்பற்றினார்.

ஆனால் காவல்துறையினர் மருத்துவர் உமாசங்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் உமா சங்கர், சில தினங்களில் நடைபயிற்சி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் மோதி உயிரிழந்தார்.

publive-image

இதனிடையே ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு  மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொழுது டாக்டர். உமாசங்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதன் பின்னணியில் காவல்துறையினர் சிலரும் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ் மற்றும் கூலிப்படையினர் என 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தபோது, டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ராஜேந்திரனை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும் வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனி படைகள் அமைத்து தேடி வந்தனர்.

அதே சமயம் தனியார் மருத்துவமனைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்தி மருத்துவமனையை அபகரித்த வழக்கில் வழக்கறிஞர் ராஜேந்திரன், தலைமறைவாக இருந்த நிலையில் அவர் தொடர்பான இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்த நிலையில், இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ராஜேந்திரனுக்கு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ராஜேந்திரன் சரண் அடைந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிய நிலையில் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

publive-image

இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் ராஜேந்திரனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று மனுவை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், வழக்கறிஞர் ராஜேந்திரனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 10 ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment