குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரையும் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இன்று ஐந்து பேரையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிபிஐ கோரிக்கையை ஏற்று 5 பேரையும் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.