Advertisment

குட்கா ஊழல் கைது: ஐவரையும் 4 நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி

ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு, 4 நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ அனுமதி

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ அனுமதி

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரையும் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இன்று ஐந்து பேரையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஐ கோரிக்கையை ஏற்று 5 பேரையும் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment