வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோடியக்கரை, ஆர்க்கட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
அதேசமயம், வடதமிழகத்தில் வெப்பம் இன்று கடுமையாக அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளில் 108 டிகிரிக்கு அதிகமாக இன்று வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், வெப்பம் அதிகரிக்கும் என்றும், சென்னையின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.