Advertisment

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை; பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chengalpattu doctor protest

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அதிர்ச்சி: பயிற்சி மருத்துவரை கத்தரிகோலால் குத்திய நோயாளி; ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அனிதா ஆகியோர் பயிற்சி மருத்துவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் தரப்பில் பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment