சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில, இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் ஏற்கனவே அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 40 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம், திருப்போரூர், மதுராந்தகம், பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர் உள்ளிட்ட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இதில் பலகட்ட ஆலோசனைக்கு பிறகு, பன்னூர் மற்றும் பரந்தூர் என இரண்டு இடங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பன்னூரில் 4500 ஏக்கர் நிலமும், பரந்தூரில் 4791 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வது குறித்து நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1500 கோடி மதிப்பினால 5000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் அமைக்கப்பட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும், தடையில்லாத வகையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் அமைய உள்ளது என்றும், இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil