சென்னை விமான நிலையத்தில் இன்று காலை அதிர்ச்சி நிகழ்வு நடந்தது. அங்குள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர் பரிதாபமாக பலியானார்.
சென்னை விமான நிலையம் 4-வது நுழைவு வாயில் அருகேயுள்ள மேம்பாலத்திற்கு இன்று காலை இளைஞர் ஒருவர் வந்தார். திடீரென மேம்பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவர் கீழே குதித்தார். உடல் சிதறி அவர் பலியானார்.
சென்னை விமான நிலையத்தில் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை திட்டத்துடன் வந்து அந்த இளைஞர் குதித்ததாக தெரிகிறது. அவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார்? என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.