Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதும் ”உங்களில் ஒருவன்” சுயசரிதை.. புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பு!

சுயசரிதையின் முதல் பகுதியில் இளம் வயது, பள்ளி, கல்லூரி, திரைப்படத் துறை, அரசியல், 1976 வரையிலான மிசா காலம் போன்றவற்றைப் பற்றி பேச வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Book fair 2022

Chennai Book fair 2022: CM MK Stalin announced autobiography Ungalil Oruvan

பபாசி நடத்தும்’ 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ தனது சுயசரிதையான “உங்களில் ஒருவன் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

Advertisment

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில், முதல்வர் தனது சுயசரிதையின் முதல் பகுதியில் தனது இளம் வயது, பள்ளி, கல்லூரி, திரைப்படத் துறை, அரசியல், 1976 வரையிலான மிசா காலம் போன்றவற்றைப் பற்றி பேச வாய்ப்புள்ளது என்றார்.

“புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். ஆனால், தொற்றுநோய் காரணமாக, அது ஒத்திவைக்கப்பட்டது, ”என்று முதல்வர் கூறினார். பபாசி’ இதுவரை மதுரையில் 14 புத்தகக் கண்காட்சிகளையும், கோவையில் 4 புத்தகக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இந்தச் சங்கம் மாநிலம் முழுவதும் அதிக புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.

2007ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற போது, ​​அறிஞர் அண்ணா நினைவு நூலகம் அமைப்பதாக அறிவித்து, தமிழறிஞர்கள் மற்றும் சிறந்த எழுத்தாளர்களை கவுரவிப்பதற்காக, பபாசி நிறுவனத்துக்கு, தன் சொந்த நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் வழங்கினார்.

தொடக்க விழாவின் போது ஸ்டாலினும் இதே போன்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவரால் அதை செய்ய முடியவில்லை. எனவே, உறுப்பினர்கள் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கை யாழ்பானம் நூலகம் உட்பட பல நூலகங்களுக்கு 1.5 இலட்சம் புத்தகங்களை வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். இந்த புத்தகங்கள் அவருக்கு பரிசளிக்கப்பட்டன.

விழாவில், கலைஞர் மு.க.கருணாநிதி பொற்கிழி விருதை பத்திரிகையாளர் சமஸ், மூத்த நாடக இயக்குநர் பிரசன்னா ராமசாமி, கவிஞர் ஆசைத்தம்பி, கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான ஏ.வன்னிலா, மலையாள எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோருக்கு ஸ்டாலின் வழங்கினார். அவர் மற்ற இலக்கிய மற்றும் பாபாசி விருதுகளையும் வழங்கினார்.

“திசைத்தோறும் திராவிடம்” புத்தகத்தின் முதல் பிரதியையும் முதல்வர் வெளியிட்டார். பபாசி தலைவர் எஸ்.வைரவன் வரவேற்றுப் பேசினார், செயலாளர் எஸ்.கே.முருகன் நன்றி கூறினார். தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி: காய் நகர்த்தும் முதல்வர் ஸ்டாலின்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment