Advertisment

போராட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போராட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்

சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த

தடை விதித்தும், போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ரஜினிகாந்துக்கு எதிரான வருமான வரி வழக்கு - தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி கந்தாடை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர அதிகாரம் உள்ளதே தவிர, நகர காவல்துறை சட்டத்தை பின்பற்றி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது தெரிவித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை மறு தினத்திற்கு தள்ளிவைத்தார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - நேர்முகத் தேர்வு பட்டியலை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment