Advertisment

அப்படி போடு... தன்னை தாக்கிய காவலரை 10 ஆயிரம் அபராதம் கட்ட வைத்த மூதாட்டி!

அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவலருக்கு 10 ஆயிரம் அபராதம்

காவலருக்கு 10 ஆயிரம் அபராதம்

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த மூதாட்டியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisment

காவலருக்கு 10 ஆயிரம் அபராதம்:

சென்னை ராயபுரத்தை சேர்ந்த வாசுகி (61), தனது வீட்டுக்கு அருகில் அசிப்பவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காசிமேடு குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை இல்லாததால், காசிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் புகார் அளித்தார். தொடர்ந்து புகார்கள் அளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் மீண்டும் புகார் அளிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, மூதாட்டி என்றும் பார்க்காமல் அடித்துள்ளார். மேலும் புகார் அளிக்க இனி காவல் நிலையத்துக்கு வரக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் வாசுகி புகார் அளித்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் சிதம்பர மூர்த்தி, மூதாட்டியை தாக்கியது உறுதியானது. அதனால் சம்மந்தபட்ட ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment