Advertisment

சென்னை மாநகராட்சியில் 50% வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு; தலித் அரசியல் கட்சிகள் வரவேற்பு

சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கியோதோடு மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் அதாவது 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தலித் அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

author-image
WebDesk
New Update
chennai corporation reserved mayor post for sc women, chennai corporation reserved 100 wards for women, dalit parties welcomes, சென்னை மாநகராட்சியில் 50 சதவீதம் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு, தலித் அரசியல் கட்சிகள் வரவேற்பு, urban local body polls, chenai, tambaram, avadi, tamilandu politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், சென்னையில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த முந்தைய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் செய்ததையடுத்து சென்னை மாநகராட்சி 100 வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய உத்தரவின்படி, 16 வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும் 16 வார்டுகள் எஸ்.சி இரு பாலருக்கும் 84 வார்டுகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மேயர்களே இந்த மாநகராட்சிகளின் முதல் பெண் மேயர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகளை எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதறு தலித் செயல்பாட்டாளர்களும் தலித் அரசியல் கட்சியினரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். விழுப்புரம் எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ரவிக்குமார் ஊடகங்களிடம் கூறுகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு சென்னையில் பெரும்பாண்மையாக உள்ள மக்கள் தொகை, மக்கள்தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இருப்பினும், ஒரு பெண் வேட்பாளருக்கு ஒதுக்குவது பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில முன்னாள் கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சியில் சீட் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் குறைவாக எஸ்.சி மக்கள்தொகை கொண்ட பல வார்டுகள் எஸ்.சி.க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். “மேற்கு மாம்பலத்தில், எஸ்சி மக்கள் இல்லாத பகுதிகள் எஸ்.சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகைத் தரவை எங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால் எங்களால் அதற்கான நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள வார்டுகள், எஸ்.சி மக்கள் தொகை அதிகம் உள்ள வார்டுகள் அந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம்” என்று கூறுகின்றனர்.

அதே போல, கோயம்புத்தூரில், செட்டிவீதி போன்ற எஸ்சி மக்கள் தொகை குறைவாக உள்ள பல வார்டுகள் எஸ்சி வேட்பாளர்களுக்கும், காமராஜபுரம் போன்ற வார்டுகள் பொது வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அதிமுக முன்னாள் கவுன்சிலர் எஸ். மணிமேகலை கூறியுள்ளார்.

சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிவியை எஸ்சி பெண்களுக்கு ஒதுக்குவது விதிமுறைப்படியும், கட்சியின் கொள்கைப்படியுயும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக நிர்வாகிகளூம் அமைச்சர்களும் கூறினர். சென்னை மாநகராட்சியியின் முன்னாள் மேயரும் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், “எங்கள் கட்சியில் பெண்களுக்கு துணைச் செயலாளர் பதவிகளை அளித்துள்ளோம். பல வலுவான பெண் வேட்பாளர்கள் எங்களிடம் உள்ளனர். இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையில், எங்கள் கட்சி எப்போதும் எஸ்சி சமூகங்களின் கவலைகளுக்குக் குரல் கொடுத்ததுடன், மண்டல் கமிஷனையும் ஆதரித்துள்ளது. பெண்கள் ஆட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கியோதோடு மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் அதாவது 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தலித் அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

சென்னை மாநகராட்சி தனித் தொகுதியாக அறிவித்ததற்கும், சென்னை உட்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததற்கும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவித்தது போல, துணைத் தலைவர் பொறுப்புகளிலும் இடஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டும் எனத் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Greater Chennai Corporation Tambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment