Advertisment

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ட்ரோன் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகளை சென்னை  மாநகராட்சி கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க உள்ளதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது. சிங்கார் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இது நடைபெற உள்ளது.

ஓய்வுபெற்ற அதிகாரி கே. ஆர் ஸ்ரீகாந்த் தலைமையில் திருநங்களைகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அவரிடம் பேசுகையில், ‘சென்னை மாநகராட்சி என்னை இதுதொடர்பாக தொடர்பு கொண்ட போது, திருநங்கைகளை ஏன் நியமிக்க கூடது என்று நான் கேட்டேன். இந்த முடிவுக்கு அவர்களை ஒத்துழைக்க வைத்தேன். இதுதொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு 30 திருநங்கைகளை தேர்வு செய்தோம். எனக்கு தெரிந்தவர்களை வைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்தோம். இந்த ஒட்டுமொத்த பயிற்சியும் ஆங்கிலத்தில் இருப்பதால், 1 மாதம் வரை ஆங்கில மொழி பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 15 திருநங்கைகளை தேர்வு செய்து வைத்துள்ளோம்.  15 பேரில் முதல் 7 பேரின் பெயர்களை சென்னை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் யாரும் தகுதியற்றவர் கிடையாது. சரியான வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் பெரிய இடத்திற்கு செல்வார்கள்” என்று அவர் கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment