Advertisment

கல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

பாரத ஸ்டேட் வங்கி தலைஞாயிறு கிளை மேலாளரை நேரில் ஆஜராக உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

கல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி தலைஞாயிறு கிளை மேலாளரை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

கல்விக் கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லாத நிலையில் தவறான தகவல் அளித்து தன்னுடைய தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக நஷ்ட ஈடாக 10 லட்சம் வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கல்விக்கடனுக்கு குறைந்த வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறதா, கல்விக்கடன் வழங்க என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எந்த அடிப்படையில் கல்விக்கடன் பெற 60 சதவீத மதிப்பெண்கள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது, வட்டி வசூலிக்கும் போது கல்விக்கடன் வழங்குவது தொண்டு ஆகாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளுடன் வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி , பாரத ஸ்டேட் வங்கி தலைஞாயிறு கிளை மேலாளரை ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை நிரூபிக்க தவறினால், நீதிமன்றம் தானாக முன் வந்து விதிகளை வகுக்கும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment