Advertisment

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019: Chennai High Court

Election 2019: Chennai High Court

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொடைக்கானல், சண்முகபுரம் பகுதியில் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்டதாக கூறி முகமது அலி ஜின்னா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை சீல் வைத்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் அந்த கட்டிடத்தின் திட்ட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து முகமது அலி ஜின்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கட்டுமான பணிகளில் அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாரநாணன், சேஷசாயி ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது கட்டிட திட்ட உரிமம் ரத்து செய்யபட்டுள்ளது. இதனை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்க்கு அனுப்பிய சீராய்வு மனு விசாரணையில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மனுதார் கட்டிடம் இடிக்கபட்டும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் அனுமதியின்றி கட்டபட்ட கட்டிடங்கள் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மனுதரார் சீராய்வு மனுவை 10 வாரங்களில் பரிசீலக்க அரசு செயலாளர்க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அதுவரை கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கைகள் தள்ளிப்போட அறிவுறுத்தினார். அதுவரை அந்த கட்டிடத்திற்கு வழங்கிய மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டனர். மேலும் கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நகராட்சி ஆணையர் மற்றும் நகர ஊரமைப்பு இயக்குனருக்கு உத்தரவிட்டு விசாரணை நீதிபதிகள் நவம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Kodaikanal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment