Advertisment

அரசுநிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு - மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்

10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை கொண்ட இருநபர் ஜாமீனும், விசாரணைக்கு தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ietamil fb live ma subramaian

ietamil fb live ma subramaian

அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ-வும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுசம்பந்தமான வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, மா.சுப்ரமணியனும், அவரது மனைவியும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மா.சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசியலுக்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எனவே மனுதாரர்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர்கள் போலி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளனர் என்றும், அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 3 மாடி கட்டடம் விதிகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். புகார்தாரரான பார்த்திபன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேயராக இருந்த மா.சுப்பிரமணியன், அதிகாரதுஷ்பிரயோகம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக விதிகளுக்கு புறம்பாக அரசு நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார் என்று தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த்தையடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதி இளந்திரையன் கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை கொண்ட இருநபர் ஜாமீனும், விசாரணைக்கு தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிட்கோவிடம் தான் அளித்த புகார் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கோரி புகார்தாரான, பார்த்திபன் சிட்கோ பொது மேலாளர் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார், அந்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு படி மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா ஆகியோர் மீது நான் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை எனவே சிட்கோ பொது மேலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ராமணி, நீதிபதி எம்.துரைச்சாமி முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிட்கோ பொது மேலாளர், பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment