Advertisment

தமிழிலேயே இனி தபால்துறை தேர்வு - திமுக தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

Chennai high court : தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்ததை அடுத்து, திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil

Tamil Nadu news today in tamil

தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்ததை அடுத்து, திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Advertisment

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மே 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் மே 10ம் தேதி அறிவிப்பு தொடரும் என அறிவித்து ஜூலை 23 ஆம் தேதி மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறி, அதன் நகலை மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், திமுக எம் எல் ஏ தொடர்ந்த வழக்கை முடித்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக தபால் துறை தேர்வுகளை பழைய முறைப்படி தமிழிலும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment