Advertisment

ஓபிஎஸ், மாஃபாய் பதவியை பறிக்க திமுக புதிய வழக்கு : ‘அரசை எதிர்த்தவர்கள் அமைச்சராக தொடர முடியாது’

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவிகளை பறிக்க வலியுறுத்தி திமுக சார்பில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
o.panneerselvam, chennai high court, aiadmk, dmk, deputy cm o.panneerselvam, minister mafoi k.pandiarajan, dmk filed new petition to sack ops and mafoi

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவிகளை பறிக்க வலியுறுத்தி திமுக சார்பில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள். இவர்களின் ஓபிஎஸ், துணை முதல்வராக இருக்கிறார். நிதி மற்றும் வீட்டு வசதி துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாஃபாய் பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இயங்கியபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக இயங்கினார். குறிப்பாக கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களில் ஓபிஎஸ்.ஸும், மாஃபாயும் அடக்கம்! கோவை அருண்குமார் மட்டும் வாக்களிக்காமல் புறக்கணித்தார்.

அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவை ஏற்காமல் இவர்கள் செயல்பட்டபோதும் இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எதையும் அப்போது எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தற்காலிக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இந்த முரண்பாடான நடவடிக்கை தொடர்பாக டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்சி மாறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கொறடா அர.சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்தச் சூழலில் திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பிச்சாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘இந்த அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் வாக்களித்தவர்களான ஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் இதே அமைச்சரவையில் இயங்குவது சட்டத்திற்கு விரோதமானது. இந்த அரசு மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்த அரசின் அங்கமாக எப்படி தொடர முடியும்?’ என கேள்வி எழுப்பி புதிய வழக்கை தொடர்ந்தார் பிச்சாண்டி.

இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள பழைய வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படுமா, அல்லது தனியாக விசாரிக்கப்படுமா? என்று தெரியவில்லை. இது குறித்து விரைவில் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என தெரிகிறது.

 

Chennai High Court Dmk Minister Mafoi K Pandiarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment