/tamil-ie/media/media_files/uploads/2018/08/a746-1.jpg)
புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி, 1 கோடியே 10லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜயகுமார், தாமஸ் பாண்டியன் ஆகியோர் மீது, சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரமேஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மத்திய குற்றப் பிரிவை காவல் நிலையமாக கருத முடியாது' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி, மத்திய குற்றப்பிரிவும் காவல் நிலையமாகவே கருதப்படும் எனவும், அதன் பொறுப்பு அதிகாரியாக உதவி ஆணையர் செயல்படுவதால், புகார் மீது வழக்கு பதிவு செய்யும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெளிவுப்படுத்தினார்.
மேலும், மனுதாரரின் புகார் மனுவை, 2 மாதத்திற்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us