தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. அதில் தமிழ் வழிக் கல்வியில் படித்த விண்ணப்பித்த நிலையில் தன்னை தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை.
தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில், 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை அரசுத்துறையே சரிவர பின்பற்றப்படவில்லை.
இதனால் , தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோய் உள்ளது. எனவே அரசின் உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் ஒரு இடத்தை நிரப்பாமல் இருக்க உத்தரவிட வேண்டும். தேர்வு விரிவுரையாளர் பணி தேர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, ‘மனுதாரரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட வேண்டும். தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில், 20 சதவிகிதம் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.