Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை இல்லை: இ.பி.எஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஐகோர்ட்

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
AIADMK general council meeting case, o panneerselvam, edappadi k palaniswami, chennai high court, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு, ஐகோர்ட் தீர்ப்பு, நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு வாதம், ஐகோர்ட் இடைக்கால உத்தரவு, AIADMK general council meeting, OPS vs EPS aguement, chennai high court interim order soon

Chennai High court order to EPS to answer about ADMK general council meeting: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, ஜூன் 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், சலசலப்புடன் நிறைவடைந்தது. 23 தீர்மானங்களையும், பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். அதன்பின்னர், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக, இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: ‘சின்னவர் என்று என்னை அழைக்க சொல்லவே இல்லை’: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

மேலும், 23 தீர்மானங்களைத் தவிர, வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை கோரிக்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட முடியவில்லை.

இதனிடையே, அதனை நிறைவேற்ற எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற, வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என கூறி வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்தவழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இ.பி.எஸ், முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி துரைச்சாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சண்முகம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, வேறு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. அவர் தொடர்ந்து செயல்பட தடை விதிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.

அதேநேரம், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதா என்பதையே ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 11 ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது. அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்ட முடியுமா? ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்று கேட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. எனவே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது, என்றும் கூறினார்.

அப்போது, அவைத்தலைவர் இல்லாவிட்டால் பிரதிநிதி ஓருவர் மூலமாக பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்றும், இ.பி.எஸ் நிரந்தர அவைத்தலைவரை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஒப்புதல் இல்லாமல் அறிவித்தது தவறு என்றும் ஓ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஓ.பி.எஸ் தன்னுடயை நலனுக்கு எதிராக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய கூடும் என்ற நோக்கத்தில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, அவர் சார்பில் சண்முகம் தொடர்ந்துள்ளார், என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஜூலை 11-ம் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகும் படி ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் கூறினர். மேலும் வழக்கை ஒத்திவைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிபதிகள் வழக்கை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதேநேரம் ஜூன் 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு நிகழ்வுகள் தொடர்பாக வரும் 7ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment