Advertisment

போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பங்கேற்க தடைவிதிக்க சட்டம் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அது போன்ற உத்தரவுகள் இருந்தால் அதனை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras high cout, chennai high court, corona relief fund, central government, கொரோனா நிவாரண நிதி

madras high cout, chennai high court, corona relief fund, central government, கொரோனா நிவாரண நிதி

போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

அதில், சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணாமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இந்த போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என மனுதரார் தரப்பிற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

அது போன்ற உத்தரவுகள் இருந்தால் அதனை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment