Advertisment

மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாத மருத்துவ கல்லூரிகளில் படித்து வெளியேறும் மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாத மருத்துவ கல்லூரிகளில் படித்து வெளியேறும் மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

மருத்துவ மாணவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மேற்படிப்பு மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், இத்தொகையை மாநில அரசு சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளிடம் வசூலித்து வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய உள்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி, புதுச்சேரியை சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களின் பெயர்களை, மாநில மருத்துவ பதிவேட்டுல் பதிவு செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது.

இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களின் பெயரை பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவையும், பதிவு செய்ய கோரிய மாணவர்களின் மனுவையும் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு, அரசு வேலை வாய்ப்புக்கும், மேல் படிப்புக்கும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது முக்கியம் என்பதால் மாணவர்களின் பெயரை கவுன்சில் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாத மருத்துவ கல்லூரிகள், மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்... மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மேற்படிப்பை முடித்த தலா 2 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்... இத்தொகையை மாநில மருத்துவ கல்வி இயக்குனர் வசூலித்து அதில், மருத்துவ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1 லட்சத்தில், 10 ஆயிரம் ரூபாயும், மேற்படிப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 2 லட்சத்தில் 25 ஆயிரம் ரூபாயும் பிடித்தம் செய்து, அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவ கல்லூரிகளின் உள்கட்டமைப்பு தரத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment