Advertisment

மாலை 6 மணிவரை மளிகைக் கடைகள், இரவு 9 வரை ஹோட்டல்கள்: இன்று முதல் சென்னையில் புதிய தளர்வுகள்

ஓட்டுநரைத் தவிர்த்து, இரண்டு பயணிகளுடன் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Lockdown, chennai corporation, corona zone wise report

Chennai Lockdown,

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊடரங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். குறிப்பாக மாலை 6 மணி வரை மளிகைக் கடைகளும், இரவு 9 மணி வரை ஓட்டல்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் 2000-க்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் சென்னையில் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1000ஐ தாண்டியது.

சென்னையில் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவந்ததால், தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஜூன் 29 நீதி தமிழகம் முழுவதும் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார். அப்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அமலில் உள்ள முழு ஊரடங்கை ஜூலை 5-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார். சென்னைக்கு முதல்வர் அறிவித்த முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று சென்னையில் சில தளர்வுகளையும் சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் எவையெல்லாம் செயல்படும் செயல்படாது என்பதை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவரை மார்ச் 25 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.

இருந்தபோதிலும், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன். தற்போது அதாவது ஜூலை 6-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

* கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000-க்கும் குறைவாக உள்ள சிறிய கோயில்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவை பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்த இடங்களில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சமூக விலகல் உள்ளிட்ட நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* அனைத்து தொழில்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த அலகுகள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஐடி / ஐடிஇஎஸ் 100 சதவிகித பலத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். குறைந்தபட்சம் 20 சதவிகித பணியாளர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பலத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும்.

* ஷாப்பிங் மால்களைத் தவிர ஷோரூம்கள் மற்றும் பெரிய வடிவமைப்பு கடைகள் (நகைகள், ஜவுளி கடைகள்), ஏர் கண்டிஷனிங் இல்லாமல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது.

* தேநீர் கடைகள், உணவகங்கள், காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவகங்களில் உணவருந்தும் வசதிகளுடன் இயக்க அனுமதிக்கப்படும். தேநீர் கடைகளும் இதேபோன்ற முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.

* சில்லறை விற்பனை (டாஸ்மாக்) கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஈ-காமர்ஸ் மூலம் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை வாகனங்கள் மற்றும் டாக்ஸிகள், தனியார் வண்டிகள் ஆகியவற்றில் ஓட்டுநரைத் தவிர, மூன்று பயணிகளுக்கு மிகாமல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகளும் இறைச்சிக் கடைகளும் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அனுமதிக்கப்படும்.

* ஐடி நிறுவனங்கள் அதிகபட்சமாக 80 பேர் கொண்ட வாகனத்தில் 50 சதவீத பலத்துடன் போக்குவரத்து வசதிகளை வழங்கினால் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த அலகுகள் 50 சதவீத வலிமையுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அதே நேரத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும்.

* ஓட்டுநரைத் தவிர்த்து, இரண்டு பயணிகளுடன் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

* ஷாப்பிங் மால்களைத் தவிர ஷோரூம்கள் மற்றும் பெரிய வடிவமைப்பு கொண்ட கடைகள் (நகைகள், ஜவுளி கடைகள்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு கடைக்குள் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது.

* காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.

* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஹோட்டல் / உணவகங்களில் உணவு டெலிவரி செய்வது அனுமதிக்கப்படும். விநியோக ஊழியர்கள் அந்தந்த நிறுவனத்திடமிருந்து அடையாள அட்டைகளைப் பெற்று பணியாற்ற வேண்டும்.

* தேநீர் கடைகள் (பார்சல் மட்டுமே) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* முடிதிருத்தும் கடைகள், சலூன்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் ஆகியவை, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துதால் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிப்பதோடு, ஏர் கண்டிஷனிங் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

* மீன் கடைகள், இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு வரை மாநிலம் முழுவதும் சில நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

* முக்கிய மத இடங்கள் மூடப்பட்டு நகர்ப்புறங்களில் சபைகள் தடை செய்யப்படும்.

* நீலகிரி மாவட்டங்கள், கொடைக்கானல் மற்றும் ஏர்காடு போன்ற சுற்றுலா இடங்கள் மூடப்பட்டு இருக்கும்.

* வீட்டுவசதி சுகாதாரம், காவல்துறை, அரசு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட சிக்கித் தவிக்கும் நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் போன்றவற்றைத் தவிர ஹோட்டல்களும் பிற விருந்தோம்பல் சேவைகளும் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

* ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி பயிற்சி / பயிற்சி நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் / தொலைதூர கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது.

* உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களைத் தவிர, பயணிகளின் சர்வதேச விமானப் பயணத்துக்கு அனுமதி இல்லை.

* மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகள் இருக்காது.

* விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும்.

* ஜூலை 31 வரை மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாது; ஜூலை 15 வரை மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செயல்பாடுகளைப் பொறுத்த வரை ஜூன் 19-க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment