சென்னை மெட்ரோ ரயிலில் இனி பயணிக்க, மெட்ரோ பீடர் சேவைகளை பயன்படுத்த மற்றும் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் உள்ள பார்க்கிங்களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை, மெட்ரோ கார்டு மூலமே செலுத்த வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு உள்ளதால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளன.
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக இஞ்ஜினியர்
மெட்ரோ ரயலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வசதியாக பாஸ்கள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு செல்ல பீடர் சேவை எனப்படும் சீருந்து சேவையும், மெட்ரோ ஸ்டேசன்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்பவர்கள், அந்த பாஸ் மூலமோ, அல்லது குறிப்பிட்ட பணத்தை கட்டியோ, பயணம் மேற்கொண்டு வந்தனர். அதேபோல், அவர்கள் பீடர் சேவை மற்றும் பார்க்கிங் வசதிகளை பணம் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணம், பீடர் சேவை மற்றும் பார்க்கிங் கட்டணங்களை மெட்ரோ டிராவல் கார்டு மூலமே செலுத்த முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவின் இந்த புதிய அறிவிப்பின் மூலம், மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களும், மெட்ரோ டிராவல் கார்டு வாங்கினால் தான் இனி மெட்ரோவில் பயணம் செய்ய முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், எப்பொழுதாவது மெட்ரோ ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் கூட, இந்த மெட்ரோ டிராவல் கார்டு வாங்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதன்காரணமாக, பயணிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.