Advertisment

3 வயது மாற்றுத் திறனாளி மகனை கொலை செய்த தாய்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

மூன்று வயது மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்தது, பிரேத பரிசோதனையில் அம்பலமானதால் பதினோரு மாதங்களுக்கு பிறகு போலீசாரால் தாய் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
3 year old disabled boy - மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த தாய் கைது murdered -

Chennai News: மூன்று வயது மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்தது, பிரேத பரிசோதனையில் அம்பலமானதால் பதினோரு மாதங்களுக்கு பிறகு போலீசாரால் தாய் கைது செய்யப்பட்டார்.

Advertisment

தாய் நதியா (33), தந்தை சக்திவேல் (34 ) இவர்கள் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வருடத்திற்கு முன்  இஷாந்த் என்ற குழந்தை பிறந்தது. இஷாந்த் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்ததால் குழந்தையை வளர்பது  மிக கடினம் எனகூறி அண்டை வீட்டாரிடம் நதியா   வேதனை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சிறுவன் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, என கூறி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏதும் எழாமல் இருந்ததால் சிகிச்சைக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுயுள்ளனர்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி பிரேத பரிசோதனை செய்யுமாறு போலீசார் கூறியுள்ளனர். வழக்கும் பதிவு செய்துள்ளனர். நடக்க முடியாத சிறுவனுக்கு எப்படி உடலில் இவ்வளவு காயம் ஏற்பட்டது என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாய் நதியாவை போலீசார் விசாரித்துள்ளனர்.

விசாரணைக்கு பின் தாம்  தான் சிறுவனை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றி தாய் நதியாவை போலீசார் கைது செய்தனர்.பின்னர் தாய் நதியாவை  சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil".

Crime Murder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment