Advertisment

செய்தி நிறுவன அலுவலகத்தில் புகைப்பட பத்திரிக்கையாளர் டி.குமார் தற்கொலை

தனியார் செய்தி நிறுவன புகைப்பட பத்திரிக்கையாளர் குமார், அலுவலகத்திலே தற்கொலை செய்து கொண்டார்

author-image
WebDesk
New Update
செய்தி நிறுவன அலுவலகத்தில் புகைப்பட பத்திரிக்கையாளர் டி.குமார் தற்கொலை

Chennai photojournalist T Kumar found dead in newsroom, suicide suspected: சென்னையில் உள்ள செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் டி குமார் நேற்று இரவு அலுவலகத்தில் இறந்து கிடந்ததாக அந்த அமைப்பின் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் குமாரின் உடலை சக ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவலின் பேரில், போலீஸார் அங்கு வந்து புகைப்படப் பத்திரிக்கையாளர் குமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, திங்கள்கிழமை குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

56 வயதான குமாருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இங்குள்ள செய்தி வெளியீட்டின் ஆதாரங்கள், அவர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வந்ததாகவும், 'சம்பளப் பாக்கியை' எதிர்கொண்டதாகவும் கூறினர்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள புகைப்படப் பத்திரிக்கையாளரான குமார், செய்தி நிறுவனத்தின் தரவரிசையில் அதன் மாநில பணியகத் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தார். அவர் 1986 இல் அந்த செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார், மேலும் குமார் தமிழ்நாட்டில் ஒரு செய்தி நிறுவனத்தின் மாநிலத் தலைமை பொறுப்பேற்ற முதல் புகைப்படக் கலைஞர் ஆவார்.

மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் தி.குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினர், மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி திரு.தி.குமார் (வயது 56) நேற்றைய தினம் (13-02-2022) ஞாயிற்றுக்கிழமை தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் நம் நெஞ்சில் பேரிடியாக விழுந்தது. உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர். சக பத்திரிகை தோழர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்ட திரு.குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று. அன்னாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

யு.என்.ஐ செய்தி நிறுவனம் கடந்த 5 வருடங்களாக தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்காமல் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வஞ்சித்துள்ளது. மூத்த பத்திரிகையாளர் திரு.தி.குமாரின் அகால மரணம் இந்த வஞ்சகத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது. உடனடியாக யு.என்.ஐ செய்தி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியங்களை வழங்கிட வேண்டும். தொழிலாளர் நலத்துறை இதை உறுதி செய்திட வேண்டும்.

மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இருந்த திரு.குமார் அவர்களின் இந்த அகால மரணம் பெரும் துயரத்தை தந்துள்ள நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திரு.குமார் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி உதவிட வேண்டுகிறோம்.

நம் சக தோழர்கள் கவனத்திற்கு தாழ்மையான வேண்டுகோள்:  பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் எதுவாக இருந்தாலும் நம் சக நண்பர்களுடன் மனம் விட்டு பேசி தீர்வுக்கு வழி காண முயற்சி செய்வோம். நம்மை நம்பி,சார்ந்து நமது குடும்பம் இருப்பதை நினைவில் நிறுத்துவோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்திரிக்கையாளர் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்திரிக்கையாளர் குமார் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதை அறிந்து வேதனை அடைந்தேன். குமார் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடயை ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment