Advertisment

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்த சென்னை காவல்துறை

2020 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறை புத்தாண்டைக் கொண்டாடுவதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy New year 2020 wishes, Chennai new year celebration places

Happy New year 2020 wishes, Chennai new year celebration places

2020 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறை புத்தாண்டைக் கொண்டாடுவதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், ஹோட்டல், ரிசார்ட்ஸ், கட்சிகள் ஏற்பாடு செய்யும் அனைத்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான வழிக்காட்டும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை மூத்த அதிகாரிகள் கண்காணிப்பதால், கூட்டத்திற்கு சிறிது நேரமே உள்ளது.

போலீஸ் அதிகாரிகள் முறையான கள ஆய்வை மேற்கொண்ட பின்னரே புத்தாண்டு விருந்துகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் ஜூனியர் அதிகாரிகளுக்கும் காவல்துறை இணை ஆணையர்களுக்கும் காவல்துறை துணை ஆணையர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் விருந்துகளும் அதிகாலை 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அதில் மது வழங்குவதற்கான நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹோட்டல் அல்லது ரிசார்ட்டுகளுக்கு வருபவர்கள் அனைவரும் முறையான அடையாளத்தை வழங்க வேண்டும். அவர்களின் சான்றுகளை ஹோட்டல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்குமுன்பு சரிபார்க்க வேண்டும். இது ஒரு முழுமையான பாதுகாப்பு சோதனைடன் இருக்க வேண்டும். ஹோட்டல்களில் பெண்கள் போலீஸாரின் உதவியை நாடலாம்.

காவல்துறை தீ தடுப்பு பாதுகாப்பு தொடர்பான விதிகளையும் வகுத்துள்ளனர். அதோடு, அவசரகால சூழ்நிலைகளில் அவசரவழிகளில் எவ்வாறு வெளியேறுவது என்பதை பயன்படுத்துவது குறித்து அனைத்து பார்வையாளர்களுக்கும் விளக்குமாறு ஹோட்டல் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வசதிகள் மக்களை ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவசர வழிகளில் வெளியேற்றுவதற்கு வழிகாட்டு தெளிவான குறிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இது தவிர, பார்ட்டிகள் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருக்கும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை அமைக்குமாறு ஹோட்டல்களை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடுமாறு ஹோட்டல் நிர்வாகங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய முடியாதவர்கள் பார்வையாளர்களை குளங்களிலிருந்து விலக்கி வைக்குமாறு பாதுகாப்புக் காவலர்களிடம் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீச்சல் குளம் அருகே எந்த பார்ட்டியும் நடத்தக்கூடாது. குளத்தின் மேல் எந்த மேடைகளும் அமைக்கக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.

விருந்துக்குப் பின்னர் குடிபோதையில் எந்தவொரு விருந்தினரும் வாகனம் ஓட்டவில்லை என்பதை ஹோட்டல் அல்லது ரிசார்ட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

குடிபோதையில் விருந்தினர்களை அவர்களின் இல்லங்களில் இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், விருந்தினர்களை தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பாதுகாப்புக் காவலர்களை ஏற்றிச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment