Advertisment

தாம்பரம், தரமணி, எழும்பூர், அடையார்... வெள்ளி, சனி கிழமைகளில் இந்த ஏரியாக்களில் மின்தடை!

சென்னையின் பல்வேறு இடங்களில் ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்; தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai power cut

Chennai power cut these parts of Chennai will face a power cut

Chennai power cut news on July 15 and 16: சென்னையில் ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அது எந்ததெந்த பகுதிகள் என இப்போது பார்ப்போம்.

Advertisment

15.07.2022 வெள்ளிக்கிழமை மின்தடை 

சென்னையில் 15.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி கோரிடர், ஆவடி ஆகியதுணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதையும் படியுங்கள்: அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி; விலை உயரும் அபாயம்: போராட்டம் அறிவித்த அரிசி ஆலை அதிபர்கள்

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐ.டி கோரிடர் பகுதி: தரமணி - சி.பி.ஐ காலனி, கோவிந்தசாமி நகர், கற்பக விநாயகர் கோவில் தெரு, சேரன் செங்குட்டுவன் தெரு, பெருங்குடி - லஷ்மன் நகர், பெரியநாயகி தெரு, கருணாநிதி தெரு, சோழன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி∶ மிட்டனமல்லி - மிட்டனமல்லி கண்டிகை, ஐ.சி.எஃப் காலனி, பெரியார் நகர், பருத்திப்பட்டு காமராஜ் நகர் - பாண்டியன் நகர், லக்ஷ்மி நகர், மூர்த்தி நகர், அமிதி பருத்திபட்டு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

16.07.2022 சனிக்கிழமை மின்தடை 

சென்னையில் 16.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், போரூர், அடையார், பொன்னேரி ஆகியதுணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர் பகுதி: ஏழு கிணறு துணை மின் நிலைய பராமரிப்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும்.

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் - மேற்கு அண்ணாநகர், சிட்டிபாபு நகர், செல்வம் நகர், நியூ காலனி, ஐ.ஏ.எப் - வால்மீகி தெரு, காந்தி பூங்கா, எல்.ஐ.சி காலனி, புத்தர் தெரு, ராதா நகர் - கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோவில் தெரு, விஸ்வநாதன் தெரு, லஷ்மி நகர், பெரும்பாக்கம் - சௌமியா நகர் மாம்பாக்கம் மெயின் ரோடு, நீலா நகர், சிவகாமி நகர், நல்லதம்பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி∶ திருநாகேஸ்வரம் - ஏரிக்கரை, திருமலை நகர், பார்வதி நகர், மூகாம்பிகை நகர், கோவூர் - பாலாஜி நகர், நான்கு ரோடு ஜங்ஷன், சுபலட்சுமி நகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் நீலாங்கரை - ராஜா நகர், ஆசிரியர் காலனி, பாண்டியன் நகர், ஈ.சி.ஆர், வேளச்சேரி - ஆதிபதி மருத்துவமனை, டான்சி நகர் 8வது, 15வது மற்றும் 16வது தெரு, தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்ஸி, பேபி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் துணைமின் நிலையம்-II தொழிற்பேட்டை காம்ப்ளாக்ஸ், தமிழ்நாடு வீட்டுவாரிய குடியிருப்பு, பாப்பன்குப்பம், சிந்தலக்குப்பம் மற்றும் சித்ரராஜா கண்டிகை.

2 நாட்களும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும், இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment