Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை மணலி பகுதியில், அக்டோபர் 10ம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( TANGEDCO) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மணலி பகுதியில் உள்ள காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம், பார்த்தசாரதி தெரு, எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், கங்கையம்மன் நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜ் நகர், பெரியசேக்காடு, பார்வதி நகர், அன்னை இந்திரா நகர், அம்பேத்கர் தெரு, ஆண்டார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.