/tamil-ie/media/media_files/uploads/2019/09/eb-1-1.jpg)
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் கோயம்பேடு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 26ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ( செப்டம்பர் 26ம் தேதி) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்பேடு : அன்னபூர்ணா நகர், பிரகாஷ் நகர், அன்னபூரணி நகர், பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், மெஜஸ்டிக் காலனி, ஐயப்பா நகர், முனுசாமி நகர், தேவகி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
திருவேற்காடு : திருவேற்காடு, திருவேற்காடு கோப் நகர், தேரோடும் வீதி, சிவன் கோயில் சாலை, அரவிந்த் நகர், காமதேனு நகர், பள்ளிக்குப்பம், மதிரவேடு, காவேரி நகர், ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ராயல் கார்டன், புளியம்பேடு சாலை, விஜிஎன் மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம், பொன்னியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகள்.
மஞ்சம்பாக்கம் : பத்மாவதி நகர், செல்லியம்மன் நகர், கம்பன் நகர், அஜீஸ் நகர், ஏவிஎம் நகர், பெருமாள் கோயில் தெரு, மந்தைவெளி, தெலுங்கு காலனி, ராமச்சந்திரா நகர், கிருஷ்ணா நகர், ஜே ஜே நகர், மஞ்சம்பாக்கம், காமராஜர் சாலை, விஜிகே நகர் திருமுருகன் நகர், கதிர்வேலன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us