சென்னையில் இன்று (ஆக. 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு, கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு
கந்தன்சாவடி சோழமண்டலம், பம்மல் நல்ல தம்பி தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
ராமாபுரம் கலசத்தம்மன் கோவில் தெரு, செல்லம்மாள் நகர், திருப்பதி நகர், சத்தியா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்..
அம்பத்தூர்
பாடி டி.வி.எஸ் நகர், சிவன் கோவில் தெரு, வள்ளலார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“