சென்னையில் இன்று (ஜூலை: 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, போரூர், தண்டையார்பேட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பூந்தமல்லி; மாங்காடு – குன்றத்தூர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், அம்மன் கோவில் தெரு, காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்; செம்பரம்பாக்கம் நசரத்பேட்டை முழுவதும், மேப்பூர், வரதராஜபுரம், செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி கரையான்சாவடி ஆவடி ரோடு, பக்கிங்காம் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை: அத்திப்பட்டு புது நகர் காட்டுபள்ளி, கே.ஆர் பாளையம், ஐ.ஒ.சி.எல், நந்தியம்பாக்கம், வல்லூர் அண்ணா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“