Chennai Power Shutdown: பராமரிப்பு பணிகள் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்விநியோகத்தை நிறுத்திவைத்துவருகிறது. அதன்படி, சென்னையில் நாளை ( ஆகஸ்ட் 6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், காலை 9 மணிக்கு உள்ளாக மின்சாரம் சார்ந்த தங்களது தேவைகளை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இப்பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருமுல்லைவாயல் : செங்குன்றம்வெள்ளனூர், கொல்லுமேடு, சிட்கோ உமன்ஸ் இண்டஸ்டிரியல் எஸ்டேட், கன்னடபாளையம், அரிக்கம்பேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மடுபுரம், எல்லம்மன்பேட்டை
அடையாறு ஐஐடி பகுதி : சிஎல்ஆர்ஐ வளாகம், ஏரிக்கரை சாலையின் ஒருபகுதி, பீலியம்மன் கோவில் தெரு, நேரு நகர்
கொட்டிவாக்கம் : பத்திரிகையாளர் காலனி, ஈசிஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெரு
பெசன்ட் நகர் : ஓடையம்மன் நகர், பாண்டியம்மன் கோவில் தெரு, கங்கை தெரு, அருண்டேல் பீச் ரோடு, கடற்கரை சாலை,
அடையார் : காந்தி நகரின் பெரும்பாலான பகுதிகள்
ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாக்கனி லிங் ரோடு, அண்ணா என்கிளேவ், தாமஸ் அவென்யூ, ஹனுமன் காலனி, ஆலிவ் பீச், சின்னடிகுப்பம்
ராயபுரம் : எம்.சி. சாலை, சிமெட்ரி ரோடு, ஆண்டியப்ப முதலி தெரு, டோபி கானா தெரு, பன்னமர தொட்டி, வைகுண்ட நாதர் தெரு, மேற்கு கல்மண்டபம் சாலை
திருவான்மியூர் : கண்ணப்பன் நகர், ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி, ஸ்ரீராம் அவென்யூ, நாட்கோ காலவி, வேம்புலியம்மன் கோவில் தெரு, ஈசிஆர் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.