Chennai private medical college assistant professor : சென்னையில் இருந்து 44 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரி. அந்த கல்லூரியில் ஒன்றரை வருடங்களாக பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் ஒருவர் நேற்று முகநூலில் தன்னை காப்பாற்றும் படி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் ஒன்றரை வருடங்களாக நான் இந்த கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் தான் வசித்து வருகின்றேன். என்னுடன் பணி புரிவர்களும், அட்மின் வேலையில் இருப்பவர்களும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருகின்றார்கள் என்றும் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றும் கவலையுடன் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எனக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், என்னை அடிக்கடி அறையில் இட்டு வெளியே தாழிட்டுவிடுகிறார்கள் என்றும் கூறினார். உணவு இல்லை, குடிக்க நீர் இல்லை. அடித்து துன்புறுத்துகிறார்கள். என்னை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள் என்று அழுத வண்ணம் வீடியோவை வெளியிட்டிருந்தார். மூன்று நிமிடங்கள் வரை ஓடிய அந்த வீடியோவில் தயவு செய்து எனக்கு உதவுங்கள். என்னை யாராவது காப்பாற்றுங்கள். எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது என்று கெஞ்சியுள்ளார்.
இதனைத் தொடர்பாக அக்கல்லூரியின் டீன் டாக்டர் என். குணசேகரன் கூறுகையில், அந்த உதவி பேராசிரியரின் புகார் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் புகார் கூறிய நபர்கள் குற்றங்கள் செய்திருந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த கமிட்டி நபர்கள் அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். அந்த உதவி பேராசிரியரை காண அவருடைய தந்தையும் கல்லூரி வளாகம் விரைந்தார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள