flood related grievances call 1913 hotline : தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் போது தொடர்ந்து மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
6ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Rains Live Updates: வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி
மாநகராட்சி பணியாளர்கள், மின்சாரத்துறை, மீட்புக் குழுவினர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் புகார்களை கேட்டு தொடர்ந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவிமையம் உருவாக்கப்பட்டு அதன் எண் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் நீங்கள் தவித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு உடனடியாக அரசின் உதவி தேவைப்படும் பட்சத்தில் 1913 என்ற எண்ணுக்கு அழையுங்கள். அதே போன்று சமூக வலைதளங்களில் #Chennai1913 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துங்கள்.
உங்களின் புகார்கள் மற்றும் உதவிகளை வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்க இயலும். 9445477205, 9445025818, 9445025820, 9445025821 என்ற எண்களுக்கு வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை அனுப்பி உதவிகளை பெற இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil