Advertisment

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படுமா?

விமான நிலையத்தைத் திட்டமிட்டுக் கட்ட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம் என்பதால் நிலத்தை விரைவாக அடையாளம் காண வேண்டும்

author-image
WebDesk
New Update
Chennai Second Airport at Sriperumbudur Tamil News 

Chennai Second Airport at Sriperumbudur Tamil News 

Chennai Second Airport at Sriperumbudur Tamil News: உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைப்லைன் (National Infrastructure Pipeline (NIP)) திட்டங்களின் பட்டியலில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலைய திட்டத்தைப் புதுப்பிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

15,000 கோடி என மதிப்பிடப்பட்ட இந்த ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டம், 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ராஜக்ட் தற்போது "யோசனை கட்டத்தில்" இருப்பதாகவும், நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டதாகவும் என்ஐபி வலைத்தள பட்டியல் காட்டுகிறது. என்றாலும், விமான போக்குவரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான ஏரோ சிட்டி அமைப்பதற்கான திட்டம் இருப்பதால், இதற்காக 4,500 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், நிலத்தின் அளவு குறிப்பிடப்படவில்லை.

உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே இந்த திட்டத்தை என்ஐபியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் 500 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மேலும் அவர்கள், அதனை வடிவமைத்து, கட்டமைத்து, விமான நிலையத்தை நிர்வகிக்கும் எவருக்கும் இந்தத் திட்டத்தை ஒப்படைக்கலாம். விமான நிலையங்கள் பொதுவாக பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership) பயன்முறையில் உருவாக்கப்படுகின்றன என்றாலும் இந்த திட்டம் EPC பயன்முறையில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India (AAI)) மற்றும் ICAO ஆகியவை ஸ்ரீபெரும்புதூர் தளத்தின் சாத்தியக்கூறு ஆய்வை நடத்தி, புதிய விமான நிலையத்திற்கு ஏற்ற இடம் என மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், தமிழக அரசாங்கம் ஆர்வத்தை இழந்து, மாற்றுத் தளத்தைத் தேடத் தொடங்கியது. இரண்டாவது விமான நிலையத்திற்காக சுங்குவர்ச்சதிரத்திற்கு அருகிலுள்ள பரந்தூரில் ஓர் சாத்தியமான இடத்தை அரசாங்கம் கண்டது. மேலும், சேயூர் மற்றும் மாமந்தூர் ஆகிய இடங்களும் சாத்தியமான இடங்களாகக் கருதப்பட்டன. தற்போதுள்ள விமான நிலையம் நிறைவுற்றதற்கு முன்பே சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க சிவில் விமான அமைச்சகம் முயன்று வந்தது. இது நிலத்தின் தேவையை 2,500 ஏக்கராகக் குறைத்தது. இது சம்பந்தமாக முடிவு செய்வதில் தாமதம் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

"ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவது விலை உயர்ந்தது என்றும், வேறொரு தளத்தைத் தேட விரும்புவதாகவும் ஏஏஐ கூறினர். விமான நிலையத்தைத் திட்டமிட்டுக் கட்ட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம் என்பதால் நிலத்தை விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று ஏஏஐ வலியுறுத்தியது" என்று ஓர் அதிகாரி கூறினார்.

Airport Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment