Advertisment

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி, வழக்கறிஞர் கைது: பரந்தூரில் 200வது நாள் போராட்டம்

200வது நாளான இந்த போராட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி, வழக்கறிஞர் கைது: பரந்தூரில் 200வது நாள் போராட்டம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கட்டவேண்டும் என்ற முடிவு மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம், 200ஆவது நாள் எட்டியுள்ள நிலையில், அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

publive-image

இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பங்குகொள்கின்றனர். 200வது நாளான இந்த போராட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டிஎஸ்பி அடங்கிய 1,200 போலீஸ் குழு பாதுகாப்பிற்கு வரவழைத்துள்ளனர். போலீஸ் மட்டுமின்றி 13 வட்டாட்சியர்களுடன் போராட்டம் நடக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பு.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்க சென்ற பூவுலகின் நண்பர்கள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கைது செய்யப்பட்டார்.

Tamil Nadu Chennai Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment