Advertisment

சென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை... புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்

சென்னை சில்க்ஸ் கடையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai silks new building ban

chennai silks new building ban

சென்னை டி-நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையின் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை சில்க்ஸ் கடை கட்டுமானப் பணிக்கு தடை:

சென்னை தியாகராய நகர் பகுதியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் கடந்த ஆண்டு மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை மற்றும் கடையில் இருந்த அனைத்து ஜவுளி மற்றும் தங்கமும் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து புதிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிஎம்டிஏ விதிகள் மீறப்பட்டுள்ளதாக கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை சில்க்ஸ் கடையின் தீ விபத்து குறித்த செய்திக்கு

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, எதன் அடிப்படையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என பல கேள்வி எழுப்பினர். மேலும் கட்டத்திற்கு அனுமதி வழங்கிய 20 நாட்களில் 40 சதவிகித கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ளது. இது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை சில்க்ஸ் கடையின் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai T Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment