Advertisment

'தி சென்னை சில்க்ஸ்'... பிரம்மாண்டம் சரிய ஆரம்பித்துவிட்டது!

போக்குவரத்து மாற்றம், இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தி சென்னை சில்க்ஸ்'... பிரம்மாண்டம் சரிய ஆரம்பித்துவிட்டது!

நேற்றுமுன்தினம் அதிகாலை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி, உயிரை பணயம் வைத்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட 36 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைக்கப்பட்டது.

Advertisment

நேற்று கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்க இருந்த நிலையில், 4-வது தளத்தில் மீண்டும் தீ எரியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் 4-வது தளத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தற்போது அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஆரம்பமாகிவிட்டது. 'ஜா கட்டர்' எனப்படும் இரண்டு ராட்சத இயந்திரங்கள் கொண்டு, மேலிருந்து கீழாக கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது. இந்த இந்த ஜா கட்டரில் உள்ள பிளேடுகள் மூலம் , கற்கள் சுக்குநூறாக உடைக்கப்படுமாம்.

publive-image

T Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment