Advertisment

கோவில் குருக்களை கட்டிப் போட்டு, மனைவி கொலை : வடபழனியில் பயங்கரம்

கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னை வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai, Vadapalani Temple Priest Prabhu Wife Murder

Chennai, Vadapalani Temple Priest Prabhu Wife Murder

கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னை வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கோவில் குருக்களின் பெயர் பிரபு. இவர், சென்னை வடபழனி, முருகன் கோவில் குருக்களாக இருக்கிறார். இவரது மனைவி பெயர் பிரியா(24). இந்தத் தம்பதியருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கோவில் குருக்கள் பிரபு இன்று காலை 6.15 மணி அளவில் வீட்டுக்கு வெளியில் உள்ள கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்தார். இதனை பார்த்து வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரது கட்டுகளை அவிழ்த்தனர். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வடபழனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இணை ஆணையர் மகேஸ்வரி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொலையுண்ட பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பிரபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது நகைக்காக பிரியா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

பிரியா கழுத்தில் அணிந்திருந்த செயின் காணாமல் போயிருந்தது. நேற்று நள்ளிரவில் குருக்கள் பிரபுவின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பிரியாவை கொலை செய்ய முயன்ற போது தடுக்க வந்த பிரபுவை கட்டிபோட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கொலை-கொள்ளை குறித்து துப்பு துலக்கி குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment