shocking satellite pictures : சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் காலி குடங்குகளுடன் தெரு தெருவாக அலைந்துக் கொண்டிருக்கின்றனர். இரவு பகல் பாராமல் மக்கள் தண்ணீர் லாரிக்கு வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு எடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு குடிநீர் பற்றாக்குறையை போக்க முதல்வர் 300 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நேரத்தில் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் எப்படி மாறியது? சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி? என்பதை விளக்கும் வகையில் ஷாக் தரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
நிலத்தடி நீட் மட்டத்துடன் பசுமையாக காட்சியளித்த சென்னை.
குறைய தொடங்கிய நிலத்தடி நீர் மட்டம்.
தற்போது நிலத்தடி நீர் வறண்டு தண்ணீருக்காக திண்டாடும் சென்னை.