Advertisment

குடை எடுத்துட்டு போக மறந்துறாதீங்க : வெயில் மண்டைய பொளக்குமாம்....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai weather satellite, chennai weather forecast, chennai weather today, bbc weather chennai, weather in chennai for next 5 days, weather forecast chennai cyclone, chennai weather now, weather in chennai tomorrow, சென்னை வானிலை rain updates, weather tomorrow

chennai weather satellite, chennai weather forecast, chennai weather today, bbc weather chennai, weather in chennai for next 5 days, weather forecast chennai cyclone, chennai weather now, weather in chennai tomorrow, சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை, நாளைய வானிலை, இன்றைய வானிலை, மழை, rain updates, weather tomorrow

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்துக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம், 5ம் தேதி இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதிய புயல் சின்னம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : வங்க கடல் பகுதியில் நாளை (நவ.6) புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

"அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

"மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசை நோக்கி நகர்ந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு புயலாகவும் மாறும். புயலாக மாறிய பின்னர் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் வங்கதேச கடற்கரையையொட்டி அது நகரும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகும். இந்த புயல் வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசா பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 7ம் தேதி வரை மத்திய தென் கிழக்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில், மண்டபம் பகுதியில்- 4 செ.மீ., ஆலங்குடியில்- 2 செ.மீ., பேராவூரணியில் 1 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அக் 1 முதல் இன்று வரை இயல்புக்கு அதிகமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment