Chess Champion Vishwanathan Anand Father passed away Tamil News : ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டதைக் கைப்பற்றிய விஸ்வநாதன் ஆனந்த்தின் தந்தை கே.விஸ்வநாதன் கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
92 வயதாகும் விஸ்வநாதன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் விஸ்வநாதனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
விஸ்வநாதன் ஆனந்த்திற்கு அவருடைய தந்த மிகப் பெரிய பக்கபலமாக இருந்ததாகவும் அவருடைய உலக சாம்பியன்ஷிப் வெற்றிகள் அனைத்தையும் கண்டுள்ளார் என்றும் ஆனந்த்தின் மனைவி அருணா குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil