Chidambaram MP Thol. Thirumavalavan IETamil FB live : கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் மக்கள் மற்றும் அரசு ஆற்ற வேண்டிய கடமைகள், ஊரடங்கு காலங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள், நிர்வாகிகள் போன்றோர் பேசி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் அரசு எடுத்திருக்கும் முடிவுகளில் உள்ள சாதக பாதகங்களை நம்மிடம் விளக்கி வருகின்றனர்.
ஐ.இ. தமிழ் வாசகர்களுக்கும், அரசியல் மற்றும் நிர்வாக ஆளுமைகளுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து இரு தரப்பு கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளை பரிமாறிக் கொள்ள உதவி வருகின்றோம். இன்று நம்முடன் ஐ.இ. தமிழ் நேரலையில் நம்முடன் பேச வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
பெருங்கொள்ளை காலங்களில் மத்திய அரசு, மாநில எடுத்து வரும் நடவடிக்கைகள், எம்.பி. மேம்பாட்டு நிதி, சம்பள குறைப்பு, சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் போலி செய்திகள் குறித்து நீங்கள் உங்களின் கேள்விகளை அவரிடம் கேட்கலாம். உங்களின் எண்ணங்களை அவருடன் பகிர்ந்து கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/-ல் நீங்கள் சரியாக 04:30 மணிக்கு இணைந்தால் போதும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil